Wednesday 15 April, 2009

உங்கள் DVD பிளேயரில் டால்பி டிஜிட்டல் மட்டும் தான் உள்ளதா ?? DTS 5.1 ஆக மாற்ற விரும்புகிறீர்களா ???

நம்மிடம் ஒலி அமைப்பு (Sound System) முறைகளில் DTS சிறந்ததா ? டால்பி டிஜிட்டல் சிறந்ததா ? என்று கேட்டால்....என்னவென்று சொல்வோம் ? சிறிதும் தயக்கம் இல்லாமல் DTS ஒலி அமைப்பே சிறந்தது என்று...DTS சிறந்ததுதான் ஆனால் எந்த சந்தர்பத்தில் என்பதுதான் கேள்வி.....

முதலில் திரையரங்குகளில் எப்படி ஒளி, ஒலி அமைப்புகள் இருந்தது என்று பார்ப்போம்...பேசும் திரைப்படங்கள் வருவதற்கு முன் ஒளிசுருள் திரையரங்கிற்கு அனுப்பப்படும்...அதனை ப்ரொஜெக்டர் மூலம் திரையில் நிழற்படமாக காட்டப்பட்டு வந்தது..பின்னர் பேசும் திரைப்படங்கள் வெளியிடபடுவதற்காக, திரைபடத்தின் ஒலிசெய்திகள்(வசனங்கள்,இசை..) அந்த படத்தின் ஒளிசுருளின் பக்கவாட்டில் உள்ள துளைகளுக்கு இடையில் கருப்பு கோடுகளாக குறிக்கப்பட்டது...ப்ரொஜெக்டரில் இருந்து வரும் ஒளி இந்த கருப்பு பட்டிகளில் பட்டு ,நிறத்தின் அடர்திகளுக்கு ஏற்ப ஒளி குன்றி மறு பக்கத்தில் உள்ள ஒளி உணர்வி&சக்தி மாற்றி மூலம் மின்னோட்ட அலைகளாக மாற்றப்பட்டு அவை ஒலிப்பான்களிள் ஒலியாக மாற்றபடுகிறது.

டால்பி டிஜிட்டல் முறையில் திரைபடத்தின் ஒளிசெய்திகள் (வசனங்கள், இசை, சுற்றுப்புற சத்தங்கள்....) ஆறு வகைகளாக பிரிக்கப்பட்டு அவைகள் ஒளிசுருளின் பக்கவாட்டில் புதிய முறைப்படி நிற பட்டைகளாக குறிக்கப்படுகிறது.... அவைகள் திரையரங்குகளில் தனி தனி 6 ஒலிப்பான்களிள் வெளியிடபடுகிறது.

DTS ஒலி முறையில் ஒலிசெய்திகள் ஒளிசுருளின் பக்கவாட்டில் குறிக்கப்படாமல் தனி காம்பேக்ட் டிஷ்குகளில் பதியப்பட்டு தனியாக திரையரங்கிற்கு வருகிறது. படமும் சப்தங்களும் புதிய தொழிநுட்பத்தின் உதவியுடன் ஒன்றிணைக்கப்படுகிறது..இதனால் மொழி மாற்ற படங்களுக்கு தனி தனி ஒளிசுருள் தயாரிக்கவேண்டிய செலவுகள் குறைகிறது....

ஆக விஜயகாந்த் சின்னகவுண்டர் திரைப்படத்தில் பஞ்சாயத்து காட்சியில் சொல்வது போல( "இவர் குஸ்தி போட தெரிஞ்ச குஸ்தி வாத்தியாரே தவிர பாடம் சொல்லி தர கணக்கு வாத்தியார் இல்லைன்னு" ) , இவையிரண்டு தொழில்நுட்பங்களும் திரைஅரங்குகளில் பயன்படுத்த உருவாக்கபட்டவைகளே தவிர DVD களில் ஒலி செய்திகளை பதிய உருவாக்கப்படவில்லை...

DVD களில் இவை இரண்டும் நம்மால் பிரித்தறிய முடியும் அளவிற்கு எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்துவதில்லை என்பதே உண்மை......

3 comments:

  1. அன்றாட வாழ்க்கையில் நமக்கும் மிகவும் பழக்கமுள்ள ஒரு தொழில்நுட்பம். அது எப்படி இயங்குகிறது என்பதில் இது வரை நான் அக்கறை எடுத்து கொண்டதில்லை. மின்னணுவியலில் முதுகலை பட்டம் (நான்) பெற்றதில் ஒரு புண்ணியமும் இல்லை என்பது தெரிகிறது.

    நல்ல பதிவுக்கு நன்றி.

    ரெ.வ. அரசு

    ReplyDelete
  2. எனது முதல் தொழில்நுட்பம் சார்ந்த பதிவிற்கு ஊக்கம் அளிக்கும் வகையில் உங்கள் பின்னூட்டம் இருந்தமைக்கு மிக்க நன்றி பிரதீப்,ரெ.வ.அரசு

    ReplyDelete