Friday 13 February, 2009

ஜென் கதை

முதல் பதிப்பை நல்ல கருத்தோட ஆரம்பிக்கலாம்னு ரொம்ப யோசிச்சு ஜென் கதையை தேர்ந்தெடுத்தேன் (சுட்ட பழம் தான் ,,ஹி ஹி ஹி)

ஜென் துறவி ஒருவர் ஆளரவம் ஏதுமற்ற ஒரு மலையடிவாரத்தில் தனிமையுடனும் எளிமையுடனும் வாழ்ந்து வந்தார். ஒரு நாள் இரவு திருடன் ஒருவன் பொருட்களைக் களவாடிச் செல்லும் நோக்கத்துடன் துறவியின் குடிசைக்குள் பிரவேசித்தான். தேடித்தேடிப் பார்த்தும் அங்கு ஒன்றும் கிடைக்கவில்லை. வெளியில் போயிருந்த துறவி திரும்பி வந்ததும் அவரைப் பிடித்துக் கொண்டான். "பாவம் நீண்ட தூரம் பயணித்து எதிர்பார்ப்புடன் வந்திருப்பாய். ஏமாற்றத்துடன் எதற்குத் திரும்ப வேண்டும். எதை வேண்டுமானலும் எடுத்துக் கொள் என்று சொல்லி அவன் முன் நின்றார். ஒன்றும் கிடைக்காத கோபத்தில் இருந்த திருடன் அவர் அணிந்திருந்த ஆடைகளைக் கழற்றிக் கொண்டு அந்த இடத்தை விட்டு ஓடிப்போனான். நள்ளிரவில் நிர்வாணத்துடன் நிலவை வெறித்துப் பார்த்து உட்கார்ந்திருந்த துறவி மிகுந்த வருத்தத்துடன் முணுமுணுத்தார்.

"பாவம். இந்த அழகிய நிலவை அவனுக்குப் பரிசாகத் தரலாம் என்று நினைத்தேனே''...

-அதுக்குதான் நாம கடவுள்கிட்ட வேண்டும்போது ,அது வேண்டும் இது வேண்டும்னு கேட்க கூடாதுன்னு சொல்வாங்க ஏன்னா நாம நம்ம லெவலுக்கு தான் கேட்போம்,அதுவே அவர்கிட்ட விட்டுட்டா அவர் லெவலுக்கு தருவார்-அப்டிங்கறது என்னோட புரிதல்.