Tuesday 31 March, 2009

ஐந்து ரூபாயும் ஐம்பது பைசாவும்.....



வழக்கம் போல மெஸ்ஸில் காலை சிற்றுண்டியை முடித்தபின் பணத்தை கொடுத்து விட்டு மீதி சில்லறைக்காக என் விரல்கள் நடனமாடிக்கொண்டு இருந்தது முதலாளியின் மேஜையில்..

எப்போதும் போல் முதலில் ஒரு புன்னகையை எனக்கு கொடுத்துவிட்டு இரண்டு ஐம்பது பைசாவை மேஜையின் மீது வைத்தார்.என்னமோ ஐம்பது பைசா பறந்து விடுவது போல் என் விரல்கள் பைசாக்களை மேசையோடு அழுத்திக்கொண்டு மீதி சில்லறைக்காக முதலாளியை பார்த்தது.

அவரோ என்னை பார்த்தார் மீதியை கொடுத்துவிட்டது போல்...அதனால் விரல்களை விளக்கிவிட்டு மீண்டும் பார்த்தேன் அதே தலை குப்பிற கிடக்கும் இரண்டு ஐம்பது காசுகள்.....

ஒரு ரூபாய் தான் இருக்கிறது என்று சொன்னேன்...உடனே இரண்டில் ஒரு ஐம்பது பைசாவை திருப்பி போட்டார் மேஜையில் ...அடடா மோடி வித்தைக்காரன் தோற்றுவிடுவான் போல ,ஐம்பது பைசா என நினைத்திருந்த காசு இப்பொழுது ஐந்து ரூபாய்....

புதிய ஐந்து ரூபாயாம்.!!!!! .பக்கத்தில் பணம் நீட்டிக்கொண்டிருந்த ஒரு பிரதிநிதியின் எரிச்சல் கலந்த விளக்கத்தில் புரிந்தது ...

அன்று சனிக்கிழமை என்பதால் இருசக்கர வாகனத்திற்கு விடை கொடுத்துவிட்டு நகரப்பேருந்தில் அலுவலகம் செல்வது வாடிக்கை...இது என்ன வேடிக்கை என்று சொல்கிறீர்களா ???? வேடிக்கைதான்.... பேருந்தில் ஜன்னலோரத்தில் அமர்ந்து கொண்டு பார்க்கும் வேடிக்கை இரு சக்கர வாகனத்தில் போகும்போது கிடைக்குமா?? அதுவுமில்லாமல் அப்படியே மாலையில் அலுவலகத்தில் இருந்து சொந்த ஊருக்கு போக புற நகர் பேருந்து நிலையம் சென்று விடலாம் இரு சக்கர வாகன ஸ்டாண்டின் கவலையின்றி...

விசயத்திற்கு வருவோம்....மோடி வித்தையில் மீளாத நான் நகரப்பேருந்தில் ஏறி அமர்ந்தேன் அலுவலகம் செல்ல....அந்த ஐந்து ரூபாயை எடுத்து டிக்கெட் வாங்கும் போது அது புதிய ஐந்து ரூபாயென சொல்ல மறக்கவில்லை,,ஒருவேளை அவரும் என்னைப்போல் ஐம்பது காசு என்று நினைத்து விட்டு பையில் போட்டு விட்டால் என்னிடம் இல்லை வேறு சில்லறை...இருப்பதோ வெறும் நூறு ரூபாய் நோட்டுகள்... அப்புறம் நடத்துனரின் வசவுகளுக்கு சக பயணிகள் மட்டுமின்றி நூறு ரூபாயில் இருந்து காந்தி தாத்தாவும் கூட சேர்ந்து சிரிப்பார் நம்மைப்பார்த்து...

நல்ல வேலை எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்கவில்லை,...டிக்கட்டும் மீதி சில்லரையும் வந்த பிறகுதான் என் சுவாசம் எனக்கு விசுவாசமானது.

அப்பொழுதுதான் நினைத்து பார்த்தேன் ,இந்த புதிய ஐந்து ரூபாய் மூத்த குடிமக்களை எப்படி பாடாய் படுத்துகிறதோ என்று ?.

உறவாலும், சுற்றத்தாலும் உள்ளத்தில் துவண்டு போயிருக்கும் நம் மூத்த குடிமக்கள் பொதுவாக தன் சட்டைபையிலும் ,சுருக்கு பையிலும் கையால் சில்லறையை தடவி பார்த்து 1 ரூபாய் ,5 ரூபாய் ,50 காசு என்று பதம் பிரிப்பது தான் வழக்கம். ஏற்கனவே உள்ள ஐந்து ரூபாய் சுற்றளவில் 50 காசு போல் இருந்தாலும் சற்றே தடிமனாக இருந்து சிறிதளவு அடையாளம் காண முதியவர்களுக்கு உதவி செய்கிறது.

ஆனால் தற்போது எனக்கு கிடைத்த இந்த ஐந்து ரூபாயோ சாட் சாட் ஐம்பது காசு போல் பளபளவென அதே தடிமனில் மின்னுகிறது.

ஒரு வேலை இந்த ஐம்பது காசும் இன்னும் சிறிது காலத்திற்குள் 20,25 பைசாக்களை போல வழக்கொழிந்து விடும் என்று எண்ணினார்களோ இந்த புதிய 5 ரூபாயை வடிவமைத்தவர்கள்??? புரியவில்லை ஒன்றும் எனக்கு...

Wednesday 11 March, 2009

மொக்கைச்சாமி.......!!!!

மொக்கைச்சாமி, மொக்கைச்சாமின்னு ஒருத்தன். கடவுளை நோக்கி ரொம்ப நாளா தவம் இருந்தானாம். என்னடா வரம் வேணும்னு கடவுள் கேட்டாராம். இவன் சொன்னானாம்..

“கடவுளே.. எனக்கு சாவே வரக்கூடாது”

“அப்படியே ஆகுக”ன்னு சொல்லிட்டு சிரிச்சுட்டே போய்ட்டாராம் கடவுள்.

ரொம்ப நாள் காட்டுல தவம் இருந்தவன் வரம் பெற்ற இறுமாப்புல நெஞ்சை நிமித்தி நடந்து வந்துட்டிருக்கறப்ப.. ஒரு சாமியார் எதிர்ல வந்து “யாரப்பா.. நீ?”ன்னு கேட்டாராம்..

இவன் சொன்னானாம்... “மொக்கைமாமி”

பாவம்.. அவனுக்கு ‘சா’வே வரல!