Tuesday 27 October, 2009

"Clash of the Titans"

புராண கற்பனைகதைகளுக்கு பெயர் போன நாடு கிரேக்கம்.அக்கதைகளில் ரொம்பவே பிரபலமான கதாபாத்திரம் பர்சியஸ். இந்த கதாபாத்திரத்தை மையமாக கொண்ட ஒரு புராணக்கதையைத்தான் "Clash of the Titans" என்ற பெயரில் 1981 யில் Deshmond devish -ஆல் படமாக எடுக்கப்பட்டிருக்கிறது,தந்திரக்காட்சிகள் (Special effects) Stopmotion என்ற தொழிநுட்பத்தின் மூலம் Ray Harryhausen -ஆல் எடுக்கப்பட்டிருக்கிறது.

தன் மகளுக்கும் கிரேக்க கடவுள்களில் ஒருவரான ஜியுசிற்கும் பிறந்த குழந்தை "பர்சியஸால்" தன் உயிருக்கு ஆபத்து என்று "ஆரகில்" என்று கிரேக்கத்தில் அழைக்கப்படும் குறிசொல்லும் தேவதைகள் மூலம் தெரிந்துகொண்டதால் அரசன் தன் மகளையும் அவளின் குழந்தையையும் உயிருடன் சவப்பெட்டியில் அடைத்து கடலில் வீசப்படுவதுடன் படம் ஆரம்பமாகிறது....

இதனால் கடுங்கோபமான கடவுள் ஜியுஸ் கடல் இராட்சசன் க்ரேகனை அந்நாட்டின் மீது ஏவிவிட கட்டளையிடுகிறார்...இடைப்பட்ட காலத்தில் தாயும் பர்சியஸும் ஒரு தீவில் கரைஒதுங்குகிறார்கள்...

கதாநாயகன் பர்சியஸ் , " தேடிஸ் " என்னும் பெண்தெய்வத்தின் மாயையால் ஜாபா என்ற நாட்டிற்கு நாடுகடத்தப்படுறாறு ...அந்நாட்டின் இளவரசியின் ஆழ்மனம் , கடவுள் ஜியுசால் சபிக்கப்பட்ட காளிபஸ் என்னும் இராட்சசன் கட்டுப்பாட்டில் இருக்கிறது... இளவரசியால் கேட்கப்படும் கேள்விக்கு பதில் சொன்னால் மட்டும்தான் இளவரசிக்கு திருமணம் நடக்கும் என்ற சாபத்துடன் இருக்கிறார், இந்த போட்டியில் தோற்கிறவர்களை உயிரோடு எரித்துவிடுகிறார்கள்.

விடுகதைக்கு எப்படி விடை கண்டுபிடித்து இந்த இக்கட்டான நிலைமையில் இருந்து இளவரசியை எப்படி நம்ம கதாநாயகன் காப்பாத்தராருங்கரதை படத்தின் முதல் பாதியில் சுவாரஸ்யமான திரைக்கதையாலும் பறக்கும் குதிரை,பிரம்மாண்ட கழுகு,மாயமாக மறைய வைக்கும் தலைக்கவசம்,காளிபஸ் இராட்சசன்(பெண்தெய்வம் தேடிஸின் மகன்) என்று படம் விறுவிறுப்பாக செல்கிறது ...

இளவரசியை கதாநாயகன் பர்சியஸ் திருமணம் முடிக்கும் தருணத்தில் இளவரசியின் தாய் தன் மகளின் அழகை தேடிஸ் பெண்தெய்வத்தின் அழகோடு கர்வத்தோடு ஒப்பிடுகிறார்....ஏற்கனவே தன் மகன் காளிபசின் சாப நிலைமை கண்டு ஏற்கனவே கடுப்பில் இருக்கும் தேடிஸ் ,ராணியின் இந்த கர்வத்தால் கடுன்கொபமாகிறார்.அதனால் அங்கிருக்கும் தேடிஸின் பிரமாண்ட சிலை சுக்கு நூறாக உடைகிறது,அப்பொழுது தலை மட்டும் உயிர்பெற்று இன்னும் 30 நாட்களில் இளவரசியை கடல் ராட்சசன் கிரேகானிற்கு கொடுக்க வேண்டும் தவறினால் ஜாபா நாடு அழிக்கப்படும் என்று சாபமிடுகிறார்....

இந்த இக்கட்டான நிலையில் தப்பிக்க வழி தெரியாமல் இருக்கும்பொழுது இயந்திர தங்க ஆந்தை ஒரு பெண்தெய்வத்தால் கதாநாயகனிற்கு உதவி செய்ய அனுப்பி வைக்கப்படுகிறது...


அதன் வழிகாட்டுதலின்படி சூனியகாரிகளை சந்தித்து க்ரேகானை அழிக்க வழி கேட்டு மெடுசா தான் ஒரே உபாயம் என்று தெரிந்துகொள்கிறான்.....மெடுசா ஒரு சபிக்கப்பட்ட ஒரு பெண், உருவத்தில் குதிரையின் உடம்பும் பாம்பின் வாலும், தலை முழுவதும் பாம்புகள் நெளிந்துகொண்டிருக்கும் இராட்சசி,இவள் உற்று பார்க்கும் பார்வையில் கல்லாக மாறிவிடுவார்கள்....அதனால் மெடுசாவை கொன்று தலையை க்ரேகானை நோக்கி காட்டினால் க்ரேகானும் கல்லாக மாறுவதில் இருந்து தப்ப முடியாது....

பார்வையாலேயே கல்லாக்கிவிடும் சக்திவாய்ந்த மெடுசாவை கதாநாயகனால் எப்படி கொல்ல முடிந்தது....காளிபசால் கொடுக்கப்படும் இடைஞ்சல்களான இராட்சச தேளுடன் வரும் சண்டை காட்சிகள்,கடல் இராட்சசன் க்ரேகான் கல்லானதா ,இளவரசி மீட்கபட்டாளா என்பது சுவாரஸ்யமாக படமாக்கியிருக்கிறார்கள்.