Wednesday 27 May, 2009

நான் மனிதன் தானா ???

தமிழ் ஊடகங்களும் ஆங்கில ஊடகங்களும் ,ராஜபக்ஷேயையும் புலித்தலைவர் பிரபாகரனையும் தன் முக்கிய செய்திகளாக மக்களுக்கு எடுத்துசென்றுகொண்டிருந்த வேளையில்...நானும் வருத்தத்தில் மூழ்கிபோனேன் தொடர்ந்து வந்த செய்திகளில் சர்ச்சைகளிலும்,தோல்வியிலும்...அடுத்த நாள் செய்திக்காக மீண்டும் காத்திருந்தேன்...

தமிழன் தானே அப்படிதான் இருந்தேன்..பக்கத்துக்கு நாட்டில் நடந்தால் எனக்கு செய்தி,பக்கத்துக்கு மாநிலத்தில் நிகழ்ந்தால் எனக்கு செய்தி,பக்கத்து ஊரில்,பக்கத்து தெருவில், பக்கத்து வீட்டில் நடந்தாலும் அது எனக்கு செய்திதான் ...என்வீட்டில் நிகழ்ந்து என்னை என்ன சேதி என்று கேட்கும் வரை எனக்கு அனைத்தும் செய்தி செய்தி....

கருகிய குழந்தையை மடியிலும் கலங்கிய குழந்தையை தோளிலும் போட்டுக்கொண்டு கதறிய ஈழத்தாயின் புகைப்படத்தை பார்த்தபொழுது,என் கண்ணீர் என்னை இகழ்ந்தது.....

வெகு சிலரால் ஊடகங்கள் வாயிலாக (திரு.ஞானியும்,திரு.மாலன்..., ) மக்களுக்கு முன்வைக்கப்பட்ட இருட்டடிப்பு செய்யப்படும் விசயங்களை நான் அறிந்தபொழுது .... எனக்கு செய்திகளாக பெரும்பான்மை ஊடகங்கள் முன்வைத்த (திணித்த)விஷயங்களின் போலித்தன்மை புரிந்தது,ஊடகங்கள் கைக்கூலிகளாக பயன்படுத்தபடுவதும் புரிந்தது....

இருட்டடிப்பு செய்யப்பட்ட,இறையாண்மையை பாதிக்காத வகையில் மனிதபிமான அடிப்படையில் மாநில மத்திய அரசுகள் செய்யத்தவறிய விஷயங்கள் என்னை மிகவும் வேதனைபடுத்துகிறது தினமும்....

உங்களுக்கு விருப்பம் என்றால் செல்லலாம் என்று விடுதலை புலிகள் தரப்பில் சொன்ன பிறகு வன்னி காடுகளில் இருந்து இலங்கை அரசின் முகாம்களுக்கு தகப்பன்,தாய்,மகள்,மகனுடன் வந்த குடும்பங்களை நிர்வாணப்படுத்தி 4 கி.மீ வரை நடக்க வைத்திருக்கிறார்கள் காட்டில் ........கேட்டதற்கு விடுதலை புலிகள் ஊடுருவி விடகூடாதென்பதற்காம்...

இந்தக்கொடுமை முன்பே தெரிந்துதான் கடலன்னை அன்றே வந்தாலோ சுனாமியாக, வந்தெடுத்து அவள் மடியில் போட்டுக்கொண்டு என் இனம் மானம் காக்க,...இது புரியாமல் அப்பொழுதெல்லாம் திட்டிதீர்தேனே கடலன்னையை.....

திறந்த வெளி முகாம்களில் அனுமதிக்கும் பொழுதும் சிறார்கள்,ஆண்,பெண் என்று பிரிக்கப்பட்டு குடும்பங்களை சிதறடித்திருக்கிறார்கள்...இது ஏன் என்று கேட்டதற்கும் முகாம்களுக்கு வரும் நபர்களின் பெயர் பட்டியல் தயாரிக்க செஞ்சுலுவை சங்க பிரதிநிதியையாவது அனுமதியுங்கள் என்பதற்கும் பதில் இல்லை அரசு தரப்பில்..இந்த ஒரு உதவியாவது ,செஞ்சுலுவை சங்க பிரதிநிதியை பட்டியல் தயாரிக்க இந்தியா இலங்கை அரசை நிர்பந்தித்து அனுமதி வாங்கி தந்திருந்தால் கூட போதும் முகாம்களில் இராணுவத்தால் காணாமல் போகும் ஈழ தமிழர்களின் எண்ணிக்கையை குறைத்திருக்கலாம்...

இளைஞர்களை புலிகள் என்று சந்தேகிப்பதாக கூறி அழைத்து சென்று, பௌத்த பூமியான சிறீலங்காவின் பணக்கார வியாதியஸ்தர்களின் பழுதுபட்ட உள்ளுறுப்புகளை மாற்ற என் ஈழ தமிழ் இளைஞனின் உடல்களை கூறு போடுகிறார்களாம்...இளைஞனுக்கு இந்த கதியென்றால் ஈழத்தமிழச்சியின் நிலை சொல்லி புரிய வைக்க வேண்டியதில்லை...

ஒபாமாவும் வன்மையாக கண்டித்தது இதைதான்,போர் இலங்கை இராணுவத்திற்கும் புலிகளுக்கும்...இதில் தலையிட நான் விரும்பவில்லை ஆனால் அப்பாவி பொதுமக்கள் ஏன் சூறையாடபடுகிறார்கள்....அமெரிக்கருக்கு புரிந்தது அண்டை நாடான இந்தியாவிற்கு புரியாதா??

தலைவா ,தமிழ் வருட பிறப்பு இனி சித்திரை இல்லை தை என்றாய் ஆமாம் என்றேன்,,சில காலம் கழித்து தை இல்லை சித்திரை தான் என்றாய் ஆமாம் என்றேன்,..பிரபா என் நண்பன் என்றாய் ஆமாம் என்றேன்.,,இல்லை இல்லை அவர் என் நண்பன் இல்லை என்றாய் அதற்கும் ஆமாம் என்றேன்...மத்தியிலும் மாநிலத்திலும் கூட்டாட்சி இருந்தால் தமிழர்களுக்கு நல்லது என்றாய்,ஆமாம் என்று தேர்தலில் வெற்றிபெற வைத்தேன்....

ஈழதமிழன் இனம் காக்க கடிதம் ,மத்தியில் பதவி வாங்க நான்கு நாட்கள் தலைநகரம் செல்கிறாய் நாற்பது நபர்களை சந்திக்கிறாய் ,வியாபாரம் படியவில்லை என்று கோபித்துக்கொண்டு திரும்புகிறாய்....சந்தித்த நாற்பதில் நால்வரிடம் ,அடைந்த கோபத்தில் நாலு சதவிகிதத்தை, இழக்க வேறெதுவும் இல்லாமல் உயிரை மட்டும் வைத்திருக்கும் ஈழ மக்களை காக்க செஞ்சுலுவை சங்கத்தையும்,மனிதஉரிமை சங்கத்தையும் முகாம்களில் அனுமதிக்க சிறீலங்க அரசை இந்தியா நிர்பந்திக்க கேட்டிருக்கலாமே ?.....போதும் தலைவா..உன் இனம் காக்கும் குணம் புரிந்துவிட்டது ...தமிழுக்கு தலைவனாய் இருந்துவிட்டு போ இனி தலைவனில்லை இந்த தமிழனுக்கு.....

ஜூனியர் விகடனுக்கு ஒரு பெங்களூர்வாசி பெண்மணி எழுதிய கடிதம்...பதினான்கு வருடங்களுக்கு முன்னாள் சொந்த வீட்டை விட்டு வன்முறையாளர்களால் விரட்டி அடிக்க பட்டதும்,ஒரே ஒருநாள் அகதியாக தான் பட்ட அவஸ்தைகள் பதினான்கு வருடம் கழித்தும் என் மனதை விட்டு அகலாமல் தன்னை வருத்துகிறது.அப்படியிருக்க நம் ஈழத்தமிழனின் நிலைமை என்னை மிகவும் கவலைக்குள்ளாக்குவதாக சொல்லியிருக்கிறார்....

ஒரே ஒரு நாள் அகதியாய் வாழ்ந்து பார்த்தால்தான் அந்த வலி புரியுமோ எனக்கு??...

இவ்வளவையும் பார்த்துகொண்டும் ,கேட்டுக்கொண்டும் இருக்கும் நான் தமிழன் தானா ???

என்று கேட்க போவதில்லை என் இயலாமைக்கு இறையாண்மையை கைகாட்டி என்னை மேலும் கொச்சை படுத்திக்கொள்ளவும் விரும்பவில்லை.... நான் கேட்பதெல்லாம் முதலில் நான் மனிதன் தானா ???

5 comments:

  1. quiet true!!!

    senthilkumar subramanian, coimbatore (bahrain)

    ReplyDelete
  2. unarvilla thamizhargal naam...kodumai...

    ReplyDelete
  3. Tamil Inam kevalappattu nitkirathu meendum Karunanidhiyin katchikku Vote pottathaal

    ReplyDelete
  4. senthil, un vakiyangal athanaiyum padikindra pothu ennul elumbiya unarvukal en manathai oru kulam pondru akivitathu. eniyam thamathikamal nam indhiya arasu oru nalla muyrichinai neradi kanganipin mulam ilangai tamizhargalil saga urimai valvirku seithu mudithal ,athu endrendrum kalam portrum , maraiyatha seyalaka nam tamilargalil manathil neengamal irukum

    ReplyDelete
  5. yennal parthu kanner mattum thaan veta mudinthathu.theriyavilai enna seivathu entru.anal ontru mattum sollakiren nam tamilarkal irakka padavilai,vithaikka pattu irukirakal

    ReplyDelete