Monday 2 November, 2009

பேராண்மை திரைப்படம்

பேராண்மை திரைப்படம் என்னுள் ஏற்படுத்திய எண்ணங்களை பகிர்ந்துகொள்ளும் ஒரு முயற்சி...

நமது திரைப்படங்கள் இரண்டரை மணி நேரம் என்ற எழுதப்படாத சட்டத்தில் சிக்கி ஐந்து பாடல்களால் நேரத்தை பூர்த்தி செய்யும் வேளையில், பழங்குடியினர் வாழ்வியல் சவால்கள், அந்த சமூகத்தில் இருந்து பட்டதாரியாகும் நமது கதாநாயகன் தீவிரவாதிகளிடம் இருந்து நமது ராக்கட் ஏவு தளத்தை காப்பாற்ற சந்திக்கும் சவால்கள் என்று இயக்குனர் நேர்த்தியாக இரண்டரை மணிநேரத்தை கையாண்டுள்ளார்...

ஹீரோவும் வில்லனும் ஆயதங்களாக துப்பாக்கிகளை கையில் ஏந்த,இயக்குனர் வசனங்களை ஆயுதமாக ஏந்தி மனதில் தனி இடம் பிடிக்கிறார்.... துறுவனும் மற்ற ஐந்து NCC மாணவிகளும் செல்லும் வாகனம் ஒருகட்டத்தில் பள்ளத்தில் ஓட, "இப்ப வண்டிக்கு பிரேக் போடாத ,வண்டி கவிழ்ந்துவிடும் கியர் மூலம் மட்டும் தான் வண்டியை கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரமுடியும்" போன்ற உண்மையில் நமக்கும் ஆபத்துக்காலத்தில் உதவும் செய்திகள். படம் நெடுகிலும் இது தொடர்வது மிகுந்த சுவாரஸ்யத்தை தருகிறது...காட்டு வழியில் திரும்பி வரும்பொழுது வழியை அடையாளம் காண துறுவன் ( ஜெயம் ரவி ) செய்யும் நூதனங்கள் மற்றொரு எடுத்துக்காட்டு.

"அந்த காலத்து பொண்ணுங்களுக்கு முந்தானையை சரிசெய்தே நேரம் போச்சு இந்த காலத்து பொண்ணுங்களுக்கு தலைமுடியை விலக்கி விலக்கியே நேரம் போச்சு".....வசனங்கள் ரசிக்க வைக்கும் நேரத்தில் ,பழங்குடி இன சிறுவர்களை காவல்துறை உனக்கெல்லாம் படிப்பு தேவையா என்று அடிக்கும் சமயத்தில் " எல்லாரும் படிக்கறதுக்காக அடிப்பாங்க இவங்க படிச்சிட்டு வந்து அடிக்கிறாங்கன்னு" சிறுவன் சொல்லும் வசனங்கள் நம்மை உலுக்கி எடுக்கிறது.....

குறைகள் கொஞ்சம் இருப்பதாக தோன்றினாலும் அந்த அளவிற்கு எனக்கு ஒன்றும் பெரிதாய் படவில்லை ...ஒரு விறுவிறுப்பான படம் பார்த்த திருப்தி கிடைத்தது...அனைவரும் தவறாமல் திரையரங்கில் பார்க்க வேண்டிய படம்....

3 comments:

  1. மிகச் சரியான விமரிசனம்!!!

    ReplyDelete
  2. நீங்கள் கூறிய காட்சிகள் என்னையும் கவர்ந்தது

    ReplyDelete
  3. enakkum padam romba romba pudichirukku

    ReplyDelete